இந்த நாள் என் வாழ்வின் ஒரு இனிய நாள்.
அவன் என்னை அன்போடு கட்டி கொள்ள என் முதுகோடு அவன் முகத்தை கட்டி தழுவ
அவனோடு பேசி கொண்டே இந்த உலகை மறந்து சென்றேன் .
அந்த கடற்கரை மணலில் நடந்து அலைகளை ரசிப்பதில் தான் என்ன மகிழ்ச்சி.
அந்த அலைகளின் ஓசையில் ஒரு அமைதியும் இருந்தது
என் பக்கத்தில் அவன் இருந்த பொது உலகமே என் கையில் இருப்பதென்ற ஒரு நினைப்பு
அந்த கடல் அலைகளின் ஓசைகளோடு ரசித்து நாங்கள் பேசின போதும் அந்த கடல் நீரில் கால் வைத்து விளையாடியபோது என்ன ஒரு இன்பம் மகிழ்ச்சி
மற்றவர் என்னை பார்த்து பொறமை படுவதை போன்ற ஓர் உணர்வு
இந்த சுகமே போதும் என்றெண்ணி கிளம்பினேன் என் வீட்டுக்கு என் செல்ல மகனோடு.
No comments:
Post a Comment
Your comments please.