நேசிக்கிறேன்
நீ அடித்தாலும் பிடிக்கும்
அனைத்தாலும் பிடிக்கும்
நீ திட்டினாலும் பிடிக்கும்
தீண்டினாலும் பிடிக்கும்
நீ யாசித்த போதும் பிடிக்கும்
ஏய்த்த போதும் பிடிக்கும்
நீ கட்டிய போதும் பிடிக்கும்
கடிந்த போதும் பிடிக்கும்
நீ கெஞ்சினாலும் பிடிக்கும்
கொஞ்சினாலும் பிடிக்கும்
நீ வஞ்சித்தாலும் பிடிக்கும்
வாழ்த்தினாலும் பிடிக்கும்
நீ சிரித்தாலும் பிடிக்கும்
சீண்டினாலும் பிடிக்கும்
உன் அன்பின் வெளிபாட்டை எல்லா விதத்திலும் நான் ரசிப்பேன்
என் அன்பான ராட்ஷசனே,
நீ என்று மறந்தாய் என்னை நேசிப்பதற்கு
நான் உன்னை நேசிக்காமல் இருக்க
No comments:
Post a Comment
Your comments please.