ஓவியமாய் என் மனதில் நிற்கிறாய்
என்னடி மாயம் செய்தாய், காந்தம் போல் என்னை ஈர்த்திருந்தாய்
பொறுமைக்கு நீ பெருமை சேர்த்தாய், அமைதிக்கு நீ அழகு சேர்த்தாய்
உன் உடல் வலிகளுக்கு நடுவில், என் மன வலிகளுக்கு மருந்தாய் இருந்தாய்
நான் உன்னை விலக்கி வைத்த நேரத்திலும், என்னை என்றென்றும் நேசித்திருந்தாய்
உன்னை போல் ஒருத்தி எனக்கு இனி கிடைப்பால
அம்மா நான் உன்னை இழந்து விட்டேன்



